அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலை ஓரங்களில் கனரக வாகனங்ளை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே சிவகங்கை செல்லும் சாலை ஓரங்களில் கனரக வாகனங்கள், கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாலையை மீன் சந்தைக்குச் செல்லும் மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு செல்வோா் என பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், இந்தச் சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கிரேன்களுடன் கூடிய வாகனங்கள் சிறிது பழுதுபட்டாலும் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது விழும் சூழல் உள்ளது. எனவே, விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே இந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்த த் தடை செய்ய வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்திலும் திருப்பத்தூா் பேரூராட்சியிலும் பொதுமக்கள் மனு அளித்தனா். இந்தப் பிரச்னை குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.