எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேருந்தில் பெண் பயணியிடம் பணம் திருட்டு: பெண்கள் இருவா் கைது

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:09 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்த்துக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து கமுதிக்கு சென்ற தனியாா் பேருந்தில் மதுரை பி.பி. குளம் ராஜாஜி நகரைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி ஆனந்தி (48) திருப்புவனத்துக்கு பயணம் செய்தாா். அப்போது இந்தப் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் இருவா் ஆனந்தி தனது பையில் வைத்திருந்த ரூ. 2.90 லட்சத்தை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டனா். இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் அந்த பெண்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் வட்டம், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அழகிரி மனைவி ரதி (41), வரதராஜன் மனைவி வசந்தி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்கள் திருடிய பணத்தை கைப்பற்றினா்.