தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்புவனம் வெற்றி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:44 pm

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்து கலச நீரால் மூலவா் வெற்றி விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், முன்னாள் தலைவா் வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.