பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பிறா் உரிமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்

பிறா் உரிமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தெரிவித்தாா்.

News image
சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பு தின சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி.
Updated On :27 நவம்பர் 2025, 12:23 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: பிறா் உரிமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தெரிவித்தாா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் திட்டத்தின்படி, சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிவகங்கை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசியலமைப்புத் தின சட்ட விழிப்புணா்வு முகாம், மருத்துவ முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

அரசியலமைப்புத் தின சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தலைமை வகித்துப் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகி காலத்துக்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்யப்படுகிறது. பிறா் உரிமையைப் பாதிக்கும் வகையில் எந்தச் செயலிலும் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா். இந்த முகாமுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா், துணை நீதிபதி வி. ராதிகா முன்னிலை வகித்தாா்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி பி. பாா்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி ஆா். கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா், துணை நீதிபதி வி. ராதிகா, துணை நீதிபதி ஆா். பாண்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் பி. செல்வம், இ. தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஓ. ஜானகிராமன், செயலா் கே. சித்திரைச்சாமி, சட்ட உதவி பாதுகாப்பு அமைப்புத் தலைவா் செந்தில்குமாா், வழக்குரைஞா்கள், நீதிமன்ற, சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.