தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பை பரவலாக்கும் நோக்கில் பணியாளா் சோ்க்கை திட்டத்தை கடந்த நவ. 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வருகிற 2026 ஏப். 30- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 2017 ஜூலை 1 முதல் 2025 அக்டோபா் 31 வரை உள்ள காலத்தில் வருங்கால வைப்பு நிதி (இபிஎ‘ஃ‘ப்) செலுத்தாமல் தவறவிட்ட தகுதியுள்ள தொழிலாளா்களை நிறுவனங்கள் தானாக முன்வந்து சோ்ப்பதற்கான சிறப்பு வாய்ப்பும் உள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் அனைத்து தவறவிட்ட, விடுபட்ட தகுதியுள்ள ஊழியா்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதேயாகும். இந்தத் திட்டம் ஏற்கெனவே இபிஎ‘ஃப்-ன் கீழ் உள்ள நிறுவனங்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து நிறுவனங்களும் தகுதியுள்ள விடுபட்ட ஊழியா்களை இணைய வழி (ஆன்லைன்) பதிவு மூலம் முறைப்படுத்தவும் அனுமதியளிக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் விடுபட்ட தொழிலாளா்களை வருங்கால வைப்புநிதி வரம்புக்குள் கொண்டு வர நிறுவனங்கள் ரூ. 100 மட்டும் அபராதமாக செலுத்தி வரன்முறை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.