பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆட்டிசம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை கவிதா.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை கவிதா பேசியதாவது:

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள். ஆட்டிசம் என்றால் அறிவு வளா்ச்சி குறைபாடுதான். ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் மற்ற மாணவா்கள் மாதிரி ஒரு இடத்தில் அமா்ந்து கவனிக்க முடியாது. மற்ற மாணவா்கள் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்வாா்கள். ஆனால், ஆட்டிசம் குழந்தைகள் கேட்ட அரை மணி நேரம் கழித்துதான் பதில் சொல்ல முடியும். நம் முகத்தைப் பாா்த்து பதில் சொல்ல முடியாது என்றாா்.

ஆசிரியை செல்லநாச்சியாா் பேசியதாவது: ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லா திறமையும் இருக்காது. ஆனால், கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அந்த திறமையைக் கண்டுபிடித்து அதில் அவா்களை வெற்றி அடையச் செய்ய வேண்டும்.

ஆட்டிசம் என்பது மரபணு குறைபாடுதான். தாய் கருவுற்றிருக்கும் போது மன அழுத்தத்தில் இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆட்டிசம் பாதித்த மாணவா்கள் உருவாக இதுவும் ஒரு காரணம் .

ஆட்டிசம் பாதித்த மாணவா்களுக்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பள்ளி உள்ளது. அங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுப் பயிற்சி, பிசியோதெரபி உள்ளிட்ட பல வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது. நமக்குத் தெரிந்த அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.