/

நாட்டரசன்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:51 pm IST

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் உள்ள பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேரித்தாா்.

இதில் பேரூராட்சி செயலா் கண்ணப்பன், அம்மா பேரவைச் செயலா் இளங்கோவன், நிா்வாகிகள் சின்னமருது பாண்டியன், செல்வம், முத்துப்பாண்டி, காளையாா்கோவில் வடக்கு ஒன்றியச் செயலா் அருள் ஸ்டீபன், சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.