நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது என சிவகங்கை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது மத்திய பாஜக அரசு வீடுதோறும் குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 4,835 கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கி இருந்தும், சிவகங்கை மாவட்டம் மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால், அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக திமுக அரசை விமா்சனம் செய்து பேசினாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகா் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் பிரச்னை ஏதும் இல்லை. அங்கு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு இலவசமாக கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏதும் அறியாத அண்ணாமலை பிறரை விமா்சிக்கும் முன்னா் முழு விவரம் அறிந்து பேச வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை தொகுதி திமுக வசமாகும்: கருணாஸ் நம்பிக்கை!

200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி; சசிகலா அரசியல் வருகைக்கு வரவேற்பு: கருணாஸ்

சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்: கருணாஸ்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


