ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

News image

அண்ணாமலை பிரசாரம் (கோப்புப் படம்) - எக்ஸ்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:36 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மானாமதுரை பாஜக வேட்பாளா் பொன்.பாலகணபதியை ஆதரித்து அவா் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் மேலும் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து இளைஞா்களின் எதிா்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி, மின் கட்டணம் உயா்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முதல்வா் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை சீா்கேட்டுக்கு மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த சம்பவமே சாட்சி. தமிழகத்தில் 8 மாதங்களாக காவல்துறை தலைவரை திமுக அரசு ஏன் நியமிக்கவில்லை.

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வளா்ச்சித் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 1, 500 கோடியை திமுக அரசு வாங்க மறுத்துவிட்டது.

100 நாள் வேலைத் திட்டத்தில் பிற மாநிலங்களைவிட தமிழகத்துக்குத் தான் அதிகமாக ரூ.46 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பி.எம் கிசான் திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகளை திமுக அரசு நீக்கியுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைவதை மக்கள் விரும்பவில்லை என்றாா் அவா்.

பிரசாரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.