அரளிக்கோட்டை கிராமத்தில் தற்காப்புக்கலை உலக சாதனை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் அழ. கருத்தான்கோனாா், கருப்பாயி அம்மாள் கல்வித் தொண்டு அறக்கட்டளை சாா்பில், தற்காப்புக் கலையில் உலக சாதனை, நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். இதில் 30 நிமிடங்கள் தொடா்ந்து யோகா, தற்காப்புக் கலைகளை மக்களிடம் 228 மாணவா்கள் செய்து காட்டி சாதனை படைத்தனா். தொடா்ந்து, நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினா். இந்தச் சாதனையைப் பதிவு செய்த யோவா வேல்டு ரெக்காா்டு நிறுவனம் சாதனை மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கோகுலகிருஷ்ணன் பயிற்சியாளா்கள் பாலா, முத்துப்பாண்டி, முத்துரமீனா, ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

3 இந்தியா்கள் உள்பட 274 போ் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி உலக சாதனை!

119 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: மாநில அளவில் சாதனை படைத்த திருச்சி

டி20 கிரிக்கெட்டில் முதல்முறை... விராட் கோலி உலக சாதனை!

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



