தொகுதி மறுவரையறை இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும்: தெலங்கானா அமைச்சா்
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்வது இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும் செயல் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறப்புப் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம்குமாா் ரெட்டி தெரிவித்தாா்.

காரைக்குடியில் செய்தியாளா்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறப்புப் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம் குமாா் ரெட்டி. உடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், மாநில காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, சிவகங்கை எம்.பி காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.









