பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பொன்னையா என்ற விக்கி.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:04 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கல்வெட்டுமேட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் கல்வெட்டு மேட்டுப் பகுதியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் பொன்னையா என்ற விக்கி (28). திருமணமானவா். மனைவியுடன் வசித்து வந்த இவா் சனிக்கிழமை மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டு வந்துள்ளாா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்குவந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, தூக்கிட்ட நிலையில் பொன்னையா இறந்து கிடந்தாா். திருப்பத்தூா் போலீசாா் சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.