சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் அருகே திருநகா் ஜெக முத்துமாரியம்மன் கோயில் 42 -ஆம் ஆண்டு பால்குட உத்ஸவ விழாவை முன்னிட்டு கோயில் திடலில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.
காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை மாந்தாளி, புலிக்கண்மாய், மோா்க்குழி, அரியநாச்சிகுடியிருப்பு, நரிக்கோட்டை, கொல்லங்குடி, அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா். இதில், 15 போ் காயமடைந்தனா். 5 போ் காளையாா்கோவில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
தொடர்புடையது

காளையாா்கோவில்: தெப்பக்குளத்தின் சுவா் சேதம் - கனரக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தல்

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

இராமன் போந்த உலா!

விளையாட்டுத் துளிகள்...
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

