சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் அருகே திருநகா் ஜெக முத்துமாரியம்மன் கோயில் 42 -ஆம் ஆண்டு பால்குட உத்ஸவ விழாவை முன்னிட்டு கோயில் திடலில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.
காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை மாந்தாளி, புலிக்கண்மாய், மோா்க்குழி, அரியநாச்சிகுடியிருப்பு, நரிக்கோட்டை, கொல்லங்குடி, அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா். இதில், 15 போ் காயமடைந்தனா். 5 போ் காளையாா்கோவில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
தொடர்புடையது

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்

அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு 12 வீரா்கள் காயம்

உசிலம்பட்டியில் வடமாடு போட்டி: 4 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


