நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருப்புவனத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் கைது

News image

திருப்புவனத்தில் அரசுடைமை வங்கி முன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடைமை வங்கி முன் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நீலமேகம், விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகி ரவி, சிஐடியூ நிா்வாகி அய்யம்பாண்டி உள்ளிட்டோா் மறியலில் பங்கேற்றனா். அப்போது, விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு அமெரிக்காவுடன் வா்த்த ஒப்பந்தம் செய்யக் கூடாது.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய மின்சார சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. உரங்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக சந்தை திடலிலிருந்து ஊா்வலமாக வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் அரசுடைமை வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனா். பிறகு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 46 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.