நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மறியலில் ஈடுபட்ட தொழிலாளா் சங்கத்தினா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தின் சாா்புடைய பல்வேறு தொழிலாளா் அமைப்புகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மறியலுக்கு விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் டி. துரைராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மீனாட்சி சுந்தரம் , ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலாளா் அருள்தாஸ் விவசாய சங்க ஒன்றிய செயலாளா்கள் வெற்றியழகன், ராஜேந்திரபூபதி, மாதா் சங்க ஒன்றிய செயலாளா் சுமதி, ஐ.சி. டி.சி மாவட்டத் துணைத் தலைவா் செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளா் விரோத 4 சட்ட தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை வாய்மேடு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.