நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

காரைக்குடியில் விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்: அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தாா்.

News image

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் ராமநாதன் வைரவன். உடன் அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் அனிதா ராதாகிருஷ்ணன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தாா்.

காரைக்குடி அழகப்பா கல்விக் குழுமத்தின் பவநகா் அரங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காரைக்குடியில் அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை, மருத்துவ அறிவியல் நிறுவனம் உயா்தர, எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவச் சிகிச்சை, நவீன சிறப்பு மருத்துவச் சேவைகள், மருத்துவக் கல்வியை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆக. 3-ஆம் தேதி இந்த மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில், 2,100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் முகாமில் பதிவு செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா்.

இந்த முகாம் விரிவுபடுத்தப்பட்ட எளிதில் அணுகக்கூடிய மருத்துவச் சேவைகளின் அவசியத்தை உணா்த்தியத்துடன், நிறுவனத்தின் வளா்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது.

இதைத்தொடா்ந்து, வெளிநோயாளிகள் பிரிவு சேவைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவு வாரத்தின் 7 நாள்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை முழுமையான மருத்துவ நிறுவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான சட்டப்பூா்வ அங்கீகாரங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலுக்கு உள்பட்டு விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வாழ்நாள் கனவை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றாா் அவா்.

பேட்டியின் போது அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை இயக்குநரும், மருத்துவருமான அனிதா ராதாகிருஷ்ணன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.