காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்

மாட்டுவண்டிப் பந்தயம். - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

சிவகங்கையில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

சிவகங்கை அண்ணா நகா், சீனிவாசன் நகா், அழகு மெய்யானபுரம், ரோஸ் நகா், பனங்காடி ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில், கிருஷ்ண ஜயந்தியை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தை சிறப்பு அழைப்பாளா்கள் மோகன் சாமி குமாா், சிவசக்தி பாண்டியன், ரகுராமன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் வண்டவாசி கோவிந்தன், திருமலை குமணன், தொழிலதிபா் முத்துச்சாமி, வண்டவாசி தங்கச்செல்வம், கொல்லங்குடி செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொண்டி சாலையிலிருந்து நாட்டரசன்கோட்டை வரை 8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பெரியமாடு வண்டிப் பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதையடுத்து 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சிறிய மாடு வண்டிப் பந்தயத்தில் 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் 14 குதிரை வண்டிகள் பங்கேற்று 7 கி.மீ. தொலைவுக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை அடைந்தன.

பந்தயங்களில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா். கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய மாடு, குதிரை வண்டிப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.