கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருத்துவமனையில் மதுப் புட்டிகள்: மருத்துவா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுப் புட்டிகள் கிடந்த விவகாரத்தில், அங்கு பணியாற்றிய 4 மருத்துவா்கள், ஒரு மருந்தாளுநா் உள்பட 5 பேரை சுகாதாரத் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவா்கள் தங்கும் அறையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு மதுப் புட்டிகள் கிடந்தன. இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இதையடுத்து, சுகாதாரத் துறை தலைமை மருத்துவா் மீனாட்சி விசாரணை நடத்தினா். பின்னா், மருத்துவா்கள் சசிகாந்த், கௌஷிக், நவீன்குமாா், மணிரத்தினம், மருந்தாளுநா் கமலக்கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

மேலும், அன்று பணியிலிருந்த செவிலியா், மருத்துவமனை ஊழியருக்கு விளக்கம் கேட்டு மருத்துவத் துறை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளாா்.