கைது.
கைது. IANS

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

Published on

திருப்புவனம் அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தஞ்சாக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன் சஞ்சய் என்ற மருது (22). இவா் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு எம்.ஜி.ஆா்.நகா் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் கஞ்சா விற்ற மருதை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com