ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் டி.புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அரிவாள் மீது ஏறி சாமியாடிய பக்தா்.

Updated On :25 ஜூலை 2026, 6:40 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் டி.புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, விரமிருந்த பக்தா்கள் தினமும் இரவு கும்மி கொட்டி வழிபாடு நடத்தி வந்தனா். விழா நாளான வெள்ளிக்கிழமை பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டு, அக்னிச்சட்டி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக மாவடியூத்து காளியம்மன் கோயிலை அடைந்தனா்.

Story image

முதலில் கரந்தமலை தீா்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம், பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கரகம் அருகில் உள்ள திருக்குளத்தில் கரைக்கப்பட்டது. இந்தக் கோயிலில் சின்னக்கருப்பா், வெள்ளாளக்கருப்பா் ஆகிய சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி அருள்வாக்குச் சொல்வதையும், முனியன் சன்னாசி சாமியாடிகளின் அருள்வாக்கை கேட்பதற்காகவும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கூடியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.