காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அரசுப் பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:11 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் மோதி கொண்டதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ (42). சரக்கு வேன் ஓட்டுநா். இவா் தனது மனைவி ஆரோக்கிய ஜான்சியுடன் சரக்கு வேனில் காய்கறி வாங்குவதற்காக மதுரைக்குச் சென்றாா்.

திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கழுகோ்கடை என்ற இடத்தில் வந்தபோது கோவையிலிருந்து ராமேசுவரம் சென்ற அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் ஆண்ட்ரூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி ஆரோக்கிய ஜான்சி பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.