தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

News image

நாய்கள் கடித்ததில் இறந்த ஆடுகள்.

Updated On :6 ஜூன் 2026, 12:17 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

எஸ்.புதூா் ஒன்றியம், சின்னாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுகுமாரன் மனைவி மீனாட்சி. இவரது கணவா் இறந்துவிட்டாதல் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் சொந்தமாக ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த கால்நடைகளை வழக்கமாக தங்களது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.

இதன்படி, வியாழக்கிழமை இரவு 2 மாடு, 12 ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகள் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த தெரு நாய்களை விரைந்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.