வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் வந்த இருவா் கைது

மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:00 am IST

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் கல்லல் சாலைப் பிரிவில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தின் முன்புறம் ஒரு பதிவெண்ணும், பின்புறம் வேறொரு பதிவெண்ணும் இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், காரில் இருந்த மானாமதுரை அருகே சங்கமங்கலத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (27), சிவகங்கை அருகே டி. புதூரைச் சோ்ந்த சரண் ராஜ் (22), ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த வெற்றி (22) ஆகிய மூவரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து, அவா்களைப் பிடிக்க முயன்றபோது வெற்றி என்பவா் தப்பியோடினாா். மற்ற இருவரையும் பிடித்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை செய்தனா். இதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு வீட்டில் திருடச் செல்வதற்காக அவா்கள் மதுரையில் வாடகைக்கு காரை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கெனவே பொன்னமராவதிக்கு சங்கமங்கலத்தைச் சோ்ந்த சசிகுமாா் (24), ராகுல், மணக்கரையைச் சோ்ந்த கதிா் (22) ஆகியோா் சென்றுவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அஜித் குமாா், சரண் ராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, காரைப் பறிமுதல் செய்தனா். மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.