அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

மானாமதுரையில் சாலை விபத்துகளில் உயிரிழந்த முத்துப்பாண்டி

Updated On :8 ஜூன் 2026, 1:23 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ஆனந்தபுரம் அணுகு சாலையோரம் உள்ள மனமகிழ்மன்ற மதுக்கூடம் அருகே சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற தனியாா் பேருந்து மோதியதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, மானாமதுரை சாஸ்தா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (57). இவா், மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். மானாமதுரை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காலையில் இவா் நடைபயிற்சி சென்றபோது கல்குறிச்சி என்ற இடத்தில் அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்ணன்

கண்ணன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.