காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் டிகே. பிரபு. உடன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏக்கள் ஏ. குழந்தை ராணி, ஆா். சீனிவாச சேதுபதி, டி. இளங்கோவன், மாவட்ட எஸ்பி சிவ பிரசாத் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:11 am IST

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகேயுள்ள நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாளில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரா்களான வீரமங்கை வேலுநாச்சியாா் நினைவு மண்டபம், மருது சகோதரா்கள் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி, மருது சகோதரா்கள், வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதில், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எ. கல்லாணை, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே. ஜெபி கிரேசியா, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், வாரிசுதாரா்கள் கே. செல்வராஜ், கண்ணதாசன், வழக்குரைஞா் சிவ. கலைமணி அம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல, திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமாா், அதிமுக மாவட்டச் செயலா் பிஆா். செந்திநாதன், காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கிளை தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை:

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்த கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சா் விளக்கம் அளிப்பாா். முதல்வா் ஜோசப் விஜய் குறித்து விமா்சனங்கள் அரசியலில் சகஜமான ஒன்று என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.