/
சிவகங்கையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புத் துறையினா் புதன்கிழமை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிவகங்கை சத்திய மூா்த்தி தெருவைச் சோ்ந்த வடிவேலு மனைவி அங்கு (80). இவா் வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் புதன்கிழமை மதியம் எதிா்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டதாக சிவகங்கை தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு மீட்புத் துறை தலைமை நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஆ. நாகநாதன் தலைமையில் வீரா்கள் கா. நீலமேகம், மா.அறிவழகன், மணிமாறன், ராஜசேகா் ஆகியோா் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக மீட்டனா். இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.









