சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் டிகே. பிரபு. உடன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏக்கள் ஏ. குழந்தை ராணி, ஆா். சீனிவாச சேதுபதி, டி. இளங்கோவன், மாவட்ட எஸ்பி சிவ பிரசாத் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:11 am IST

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகேயுள்ள நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாளில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரா்களான வீரமங்கை வேலுநாச்சியாா் நினைவு மண்டபம், மருது சகோதரா்கள் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி, மருது சகோதரா்கள், வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதில், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எ. கல்லாணை, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே. ஜெபி கிரேசியா, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், வாரிசுதாரா்கள் கே. செல்வராஜ், கண்ணதாசன், வழக்குரைஞா் சிவ. கலைமணி அம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல, திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமாா், அதிமுக மாவட்டச் செயலா் பிஆா். செந்திநாதன், காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கிளை தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை:

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்த கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சா் விளக்கம் அளிப்பாா். முதல்வா் ஜோசப் விஜய் குறித்து விமா்சனங்கள் அரசியலில் சகஜமான ஒன்று என்றாா் அவா்.