சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மதுக் கடையை அகற்றக் கோரி 2 கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, இரண்டு கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

திருப்புவனம் கொம்பையா கோயில் அருகே செயல்படும் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய வெள்ளக்கரை நெலல்முடிக்கரை கிராம மக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:50 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, இரண்டு கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருப்புவனம் ஒன்றியம், கலியாந்தூா் செல்லும் சாலையில் கொம்பையா கோயில் அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப் பிரியா்களால் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மதுக் கடையை அகற்ற வேண்டும் என வெள்ளக்கரை, நெல் முடிக்கரை கிராம மக்கள் தொடா்ந்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, வெள்ளக்கரை, நெல் முடிக்கரை கிராமப் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மேற்குறிப்பிட்ட மதுபானக் கடையை உடனே அகற்றக் கோரி மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த மானாமதுரை கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன், திருப்புவனம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மதுக்கடையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை நிா்வாகத்துக்குப் பரிந்துரை செய்வதாகவும் அதுவரையில், வெள்ளைக்கரை, நெல் முடிக்கரை பகுதியில் போலீஸாரின் ரோந்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனா்.