வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

துவாா் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா

திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள துவாா் கிராமத்தில் வள்ளிக் கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:55 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவுக்கு புகழ்பெற்ாகும். திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை கிராமத்தாா்கள் ஒன்று கூடி வள்ளிலிங்க சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு காலை 6 மணிக்கு ஊா் பிரமுகா்கள், விழாவுக் குழுவினா் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றியிருந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி வலை, அரிகூடை, கச்சா ஆகியவற்றால் மீன்பிடிக்க ஆரம்பித்தனா்.

இதில் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 முதல் 8 கிலோ வரை எடை இருந்தன. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற வகை மீன்களும் சிக்கின. ஆண்கள், பெண்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனா்.

இதில் திண்டுக்கல், மேலூா், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்பத்தூா், சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் விழாவில் கலந்து கொண்டனா்.