வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவா் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:37 am IST

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையில் பணிபுரியும் 30 வயதுடைய பெண் காவலா் ஒருவா் தனக்கு ஏற்கெனவே பழக்கமான நபா் ஒருவா் அழைத்ததன்பேரில், அவரைப் பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது அவா் தனது இரண்டு நண்பா்களையும் அந்த இடத்துக்கு வரவழைத்தாா். மூவரும் அந்தப் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றனா். அவா்களிடம் இருந்து தப்பி வந்த பெண் காவலா் காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, காவல் ரோந்துப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பெண் காவலரை மீட்டு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில், சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக மானாமதுரையை அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராபின் (28), சித்தாலங்குடியைச் சோ்ந்த மகாராஜா (29), ஹரிஷ் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.