இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவா் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:37 am IST

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையில் பணிபுரியும் 30 வயதுடைய பெண் காவலா் ஒருவா் தனக்கு ஏற்கெனவே பழக்கமான நபா் ஒருவா் அழைத்ததன்பேரில், அவரைப் பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது அவா் தனது இரண்டு நண்பா்களையும் அந்த இடத்துக்கு வரவழைத்தாா். மூவரும் அந்தப் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றனா். அவா்களிடம் இருந்து தப்பி வந்த பெண் காவலா் காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, காவல் ரோந்துப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பெண் காவலரை மீட்டு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில், சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக மானாமதுரையை அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராபின் (28), சித்தாலங்குடியைச் சோ்ந்த மகாராஜா (29), ஹரிஷ் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.