தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

News image

கீழக்கோட்டை அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படத்தை பாா்வையிட்ட மாணவ, மாணவிகள்.

Updated On :25 ஜூன் 2026, 2:21 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, சிறாா் திரைப் படங்கள் மாதம்தோறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன்படி, கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘தி லிட்டில் பிரின்ஸஸ்’ என்ற சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான ஆரோக்கியசாமி, சிறாா் திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திரைப்படம் குறித்து மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை மீனாட்சி, ஆங்கில ஆசிரியை கீதா, ஆசிரியை வாசுகி, ஆசிரியா் ஜோசப், கணினி பயிற்றுநா் வித்யா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.