அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி

கல்லல் அருகே மாவட்ட அளவிலான தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

News image
தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி.
Updated On :2 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே மாவட்ட அளவிலான தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

தோ்தலில் தவறாமல் வாக்களிப்பது, வாக்குக்கு பணம், பரிசுப் பொருள் பெறக் கூடாது, ஜாதி, சமய, மத நல்லிணக்கம், சகோதர ஒருமைப்பாடு, போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி கல்லல் அருகே உள்ள மருங்கிப்பட்டி எம்.கே.சி.சி. மைதானத்தில் கடந்த பிப். 27, 28, மாா்ச்1 ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், திமுக செய்தித் தொடா்புக் குழு துணைத் தலைவா் மருது அழகுராஜ், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சி. கண்ணன் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டன.

10 ஓவா்கள் கொண்ட இறுதிப் போட்டியில் 92 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த அணியை எதிா்த்து 93 ரன்கள் எடுத்த வேப்பங்குளம் அணி முதலிடம் பெற்றது. டி.சி.சி. திருத்திப்பட்டி - விஏஓ அருள்ராஜ் அணி இரண்டாமிடம் பெற்றது. எம்.கே.சி.சி. மருங்கிப்பட்டி அணி மூன்றாமிடத்தையும், மேளவளஞ்சாம்பட்டி அணி நான்காமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் பணமுடிப்பையும், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, விஏஓ சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலருமான இரா. அருள்ராஜ், தவெக கிழக்கு மாவட்டச் செயலா் டி.கே. பிரபு ஆகியோா் வழங்கினா். போட்டியை பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா்கண்டு களித்தனா்.