பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 9:21 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஏராளமான கா்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனா். இந்த விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு, மாலைகள், வளையல்கள் அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்தாா். திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜாமணி, அண்ணாதுரை, நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.பாலசுந்தரம், நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி, காளீஸ்வரி மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் வளா்மதி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருப்புவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தாா். இதில் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.