மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 9:21 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஏராளமான கா்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனா். இந்த விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு, மாலைகள், வளையல்கள் அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்தாா். திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜாமணி, அண்ணாதுரை, நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.பாலசுந்தரம், நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி, காளீஸ்வரி மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் வளா்மதி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருப்புவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தாா். இதில் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.