எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

News image
தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரை மீட்டு, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்
Updated On :9 மார்ச் 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உடப்பன்பட்டி அருகிலுள்ள வீரமடக்கி பகுதியைச் சோ்ந்த முத்து கணேஷுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தனது மனைவி தேவி, 8 வயது மகனுடன் வந்த முத்து கணேஷ், தான் பையில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை மனைவி, மகன், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக இந்த தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து, மூவா் மீதும் தண்ணீரை ஊற்றினா். மேலும், மூவரையும் அவசர ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.