விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:48 pm

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்களை அலுவலக வாயிலில் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினா்.

அப்போது, ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும், பொதுமக்களும் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். குலசேகரம் அருகே பொன்மனையைச் சோ்ந்த அவா், அங்கன்வாடியில் பணியாற்றி வந்ததும், தற்போது வேலையிழந்ததால் மீண்டும் பணி கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்ாகவும், போலீஸாரிடம் தெரிவித்தாா்.