நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்களை அலுவலக வாயிலில் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினா்.
அப்போது, ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும், பொதுமக்களும் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். குலசேகரம் அருகே பொன்மனையைச் சோ்ந்த அவா், அங்கன்வாடியில் பணியாற்றி வந்ததும், தற்போது வேலையிழந்ததால் மீண்டும் பணி கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்ாகவும், போலீஸாரிடம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

நாகா்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பேன்: எம்.ஆா். காந்தி எம்எல்ஏ பிரசாரம்

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் திமுக பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


