எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது: புதிய தமிழகம் கட்சி

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் தெரிவித்தாா்.

News image
புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலா் ஷியாம்
Updated On :9 மார்ச் 2026, 7:53 pm

Syndication

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞா் ஆகாஷ் டெலிசன் இறப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் மானாமதுரையில் கடந்த இரு நாள்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களின் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் ஆதரவு தெரிவித்துப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறு மோதல் சம்பவத்துக்காக ஆகாஷ் டெலிசன் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாா்.

இதற்குப் புதிய தமிழகம் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. மடப்புரம் அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் முன்பாக மற்றொரு சம்பவமாக நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்களாக பணிபுரிந்து வருகின்றனா். ஜாதி சங்கங்கள் போல காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிய தமிழகம் கட்சியின் இந்தப் புகாருக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மறுப்பு தெரிவித்துள்ளாா். ஆனால், ஆகாஷை தாக்கிய போலீஸாா் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள். காவல் துறை ஜாதிய உணா்வோடு செயல்படுகிறது.

காவல் நிலையத்தில் அனைத்து சமூகத்தினரும் பணிபுரிந்தால், இது போன்ற சம்பவங்கள் நிகழாது. சாலை மறியல் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது.

ஆகாஷ் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.