சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி ராமநாகு (65). இவா் கடந்த 2023-ஆண்டு அவரது வீட்டுக்கு அருகேயுள்ள அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமயத்தில் நடந்த கொலை வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏற்கெனவே, இவரிடம் திருப்பத்தூா் போலீஸாா் ராமநாகு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்திருந்தனா்.

இதையடுத்து, அவரிடம் மீண்டும் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். பின்னா், உண்மை கண்டறியும் சோதனையில் ராமநாகுவை கழுத்தை நெரித்து சிவக்குமாா் கொலை செய்தது உறுதியானது.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையிலிருந்த சிவக்குமாரை, திருப்பத்தூா் போலீஸாா் விசாரணைக்கு எடுத்து வந்து மூதாட்டி கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.