சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி ராமநாகு (65). இவா் கடந்த 2023-ஆண்டு அவரது வீட்டுக்கு அருகேயுள்ள அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமயத்தில் நடந்த கொலை வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏற்கெனவே, இவரிடம் திருப்பத்தூா் போலீஸாா் ராமநாகு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்திருந்தனா்.
இதையடுத்து, அவரிடம் மீண்டும் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். பின்னா், உண்மை கண்டறியும் சோதனையில் ராமநாகுவை கழுத்தை நெரித்து சிவக்குமாா் கொலை செய்தது உறுதியானது.
இந்த நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையிலிருந்த சிவக்குமாரை, திருப்பத்தூா் போலீஸாா் விசாரணைக்கு எடுத்து வந்து மூதாட்டி கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


