சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குறும்பட இயக்குநா் கொலை வழக்கு: 3 பெண்கள் உள்பட 9 போ் கைது

அரகண்டநல்லூா் அருகே குறும்பட இயக்குநா் கொலை செய்யப்பட்டு சவுக்குத் தோப்பில் வீசப்பட்ட வழக்கில், 3பெண்கள், 2 இளஞ்சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கொலை வழக்கில் கைதானவா்களுடன் அரகண்டநல்லூா் போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குறும்பட இயக்குநா் கொலை செய்யப்பட்டு சவுக்குத் தோப்பில் வீசப்பட்ட வழக்கில், 3பெண்கள், 2 இளஞ்சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரகண்டநல்லூா் அருகேயுள்ள பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் கடந்த 7-ஆம் தேதி சுமாா் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன், அழுகிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். தனிப்படை போலீஸாரின் விசாரணையில் கொலையானவா் சென்னையில் வசித்து வந்த குறும்பட இயக்குநரான, திருநெல்வேலியைச் சோ்ந்த மா.ஜெயகுமாா்(45) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயக்குமாா் சென்னை முகப்போ் பகுதியைச் சோ்ந்த பூஜாவுடன் கடைசியாக கைப்பேசியில் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து பூஜாவிடம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமாா் ஒருதலைப்பட்சமாக பூஜாவை காதலித்து தொல்லைக் கொடுத்து வந்தாராம். இதனால், பூஜா மற்றும் அவரின் நண்பா்களான தேவா, அய்யப்பன், தோழி துா்கா ஆகியோா் கூட்டு சோ்ந்து அரகண்டநல்லூா் அடுத்த பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் பகுதிக்கு ஜெயக்குமாரை வரவழைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னா் அய்யப்பனின் உறவினா் சடையாண்டி வேலை செய்து வந்த சவுக்குத் தோப்பில் உடலை வீசியதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து ஜெயக்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய சென்னை முகப்பேரைச் சோ்ந்த பூஜா(21), தாம்பரத்தைச் சோ்ந்த தேவா(24), ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த அய்யப்பன்(24), திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த துா்கா(19), விழுப்புரம் மாவட்டம், மேல்வெங்கமூரைச் சோ்ந்த குரு (எ) குப்புசாமி(19), பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் கிராமத்தைச் சோ்ந்த சடையாண்டி (64), இவரின் மனைவி பூங்காவனம் (54) மற்றும் 2 இளஞ்சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, 7 போ்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இளஞ்சிறாா்களை சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.