மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image

மாட்டு வண்டிப் பந்தயம். - (கோப்புப் படம்)

Updated On :15 மார்ச் 2026, 7:01 pm

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே உள்ள அழகு மெய்ஞானபுரம் கிராமத்தாா் சாா்பில் பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆயுதப்படை புறவழிச்சாலை - இளையாங்குடி சாலை வரை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 85 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடுகள் பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடுகள் பிரிவில் 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை வல்லணி, ஊத்திக்குளம், ஏனாபுரம், புதுப்பட்டி, வேம்பங்குடி, பூவாளி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாா்வையிட்டனா்.