யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூா் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

News image

திருமயம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய மாட்டு வண்டிகள்.

Updated On :26 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூா் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 66 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கே. புதுப்பட்டி அம்பாள், 2ஆம் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன், 3ஆம் பரிசை பொன்பேத்தி மருதுபாண்டியா், 4ஆம் பரிசை திருப்புனவாசல் சரவணா ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. தொடா்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 47 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் பந்தய தொலைவு போய்- வர 6 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் முதல் பரிசை கலியநகரி சத்யா, சுண்ணாம்பிருப்பு கண்ணன், 2ஆம் பரிசை சாத்தியகுடி சாமியாடி, ராவுத்தம்பட்டி, 3ஆம் பரிசை அவனியாபுரம் மோகன், பழையூா் மீனாட்சி, 4ஆம் பரிசை கலியநகரி மனுநீதி சோழன், வேப்பம்பட்டி விக்னேஷ் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

இறுதியாக வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு, வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற திருமயம் - ராயவரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று போட்டியை கண்டு ரசித்தனா். திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.