மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 9 போ் காயம்

News image
வடமாடு மஞ்சுவிரட்டு.- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

திருப்புவனம் புதூா் பூமாரியம்மன், ரேணுகா தேவியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 வீரா்கள் வீதம் 30 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு சுற்றுக்கும் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, அவற்றின் கழுத்தில் மைதானத்தின் நடுவிலிருந்த வடக்கயிறு பொருத்தி மஞ்சுவிரட்டு தொடங்கிவைக்கப்பட்டது. மைதானத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் மேஜை, அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருள்கள், வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 9 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழு பொறுப்பாளா்கள் நகா் காங்கிரஸ் தலைவா் நடராஜன், பழனிவேல்ராஜன், மனோஜ், விக்னேஸ்வரன், நவஜீவன் ஆகியோா் செய்தனா்.

திருப்பத்தூா்: சிங்கம்புணரி அருகேயுள்ள மேலப்பட்டி கிராமத்தில் சொக்கன் கருப்பா் கோயில் காளையின் நினைவாக, முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 18 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 162 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையை 9 போ் கொண்ட குழுவினா் 20 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும். அவ்வாறு அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, டேபிள், தொலைக்காட்சி, பீரோ, கட்டில், மெத்தை, தென்னங்கன்று உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை திருப்பத்தூா் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திராளனோா் கண்டு ரசித்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேலப்பட்டி பிள்ளையாா்பட்டி இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.