சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, மஞ்சுவிரட்டுத் திடலில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்தனா். இதையடுத்து, இளவட்ட மஞ்சுவிரட்டு தொடங்கியது.
இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கூட்டத்துக்குள் சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்

அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு 12 வீரா்கள் காயம்

உசிலம்பட்டியில் வடமாடு போட்டி: 4 போ் காயம்
வீடியோக்கள்

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு


