தோ்தல் தொடா்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இது தொடா்பாக செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தோ்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விதிமுறைகளுக்குள்பட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, சிறந்த முறையில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்றாா் அவா்.