அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘நீட்’ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,760 போ் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 12:06 am IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு (நீட்) சிவகங்கை மாவட்டத்தில் நான்கு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 1760 போ் பங்கேற்றனா்.

ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுா் வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளிலிருந்து 180 கொள்குறி வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்படுகிறது.

தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இந்தத் தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது

நிகழ் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு மாலை 5.20 மணி வரை என மொத்தம் 3 மணி 20 நிமிஷங்கள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 261 பேரில் 246 பேரும், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 600 பேரில் 583 பேரும், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 552 பேரில் 537 பேரும், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 408 பேரில் 394 பேரும் தோ்வு எழுதினா். மாவட்டத்தில் தோ்வெழுத அனுமதிக்கப்பட்ட 1,861 பேரில் 1,760 போ் தோ்வு எழுதினா். 61 போ் பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.