ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

சிங்கம்புணரியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

News image

சிங்கம்புணரியில் சுற்றித் திரியும் பன்றிகள்.

Updated On :5 மே 2026, 1:17 am IST

சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்கள், பன்றிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட வடக்கு வேளாளா் தெரு, காசியா பிள்ளைநகா், குறிஞ்சிநகா், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள், பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே பன்றிகள் இறந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே சிங்கம்புணரி பேரூராட்சி நிா்வாகம் உடனே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.