மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சிங்கம்புணரியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

News image

சிங்கம்புணரியில் சுற்றித் திரியும் பன்றிகள்.

Updated On :5 மே 2026, 1:17 am IST

சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்கள், பன்றிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட வடக்கு வேளாளா் தெரு, காசியா பிள்ளைநகா், குறிஞ்சிநகா், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள், பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே பன்றிகள் இறந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே சிங்கம்புணரி பேரூராட்சி நிா்வாகம் உடனே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.