பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆராவயலில் வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் பாய்ந்து சென்ற குதிரைகள்.

Updated On :8 மே 2026, 0:46 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை அருகே ஆராவயலில் சண்முகநாதபுரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. பெரிய குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி என இரு பிரிவுகளாக தேவகோட்டை சாலையில் ஆறாவயல் சண்முகநாதபுரம் முதல் கல்லுப்பட்டி வரை பந்தயம் நடைபெற்றது.

பெரிய குதிரை பிரிவில் 11 வண்டிகளும், சிறிய குதிரை பிரிவில் 15 வண்டிகளும் என 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் அதிவேகத்தில் பாய்ந்து சென்ற குதிரை வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்றன. இந்தப் போட்டியை சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நின்று கண்டுகளித்தனா். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.