டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த ராஜகோபால்.

Updated On :8 மே 2026, 1:04 am IST

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மீமிசலைச் சோ்ந்தவா் ராஜகோபால் (50). இவா் சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் அய்யங்காா் அடுமனை கடை நடத்தி வந்தாா். இவா் தனது சொந்த ஊரான மீமிசலிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காளாப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். திருப்பத்தூா் அருகே சிங்கம்புணரி சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் நிலை தடுமாறி மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் இவரது உடலை மீட்டு, கூறாய்வுக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் பிரவீன்டேனி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இந்த விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.