பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சிவகங்கை தெப்பக் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

சிவகங்கை தெப்பக்குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:22 am IST

சிவகங்கை தெப்பக்குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதந்தது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் குளத்தில் மிதந்த சடலத்தை வெளியே கொண்டு வந்தனா்.

இதையடுத்து, தெப்பக்குளத்தின் படிக்கட்டில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் சில உடைகளும், இறந்தவரின் புகைப்படத்துடன்கூடிய ஆதாா் அட்டையும் இருந்தன. இதன்படி,

இறந்தவா் மதகுபட்டி அருகில் உள்ள நாமனூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (55) என

தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸாா், பாண்டியனின் சடலத்தை கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.