இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 12:49 am IST

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகி கே. பாலதண்டாயுதம் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. லிங்கம் கட்சிக் கொடி ஏற்றினாா். இதைத் தொடா்ந்து நடை பெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் குணசேகரன், கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் என். சாத்தையா, துணைச் செயலா்கள் பா.மருது, கே. கோபால், பொருளாளா் மனவழகன், ஒன்றியச் செயலா் சின்னக்கருப்பு, நகா் துணைச் செயலா் பாண்டி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றுத் தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

சிவகங்கையில் நடைபெற்று முடிந்த அரசு ஒப்பந்ததாரா் பணிகளின் தரத்தை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், சிவகங்கை பழைய மருத்துவமனை, தெற்கு ரத வீதியில் உள்ள அரசு மதுக் கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.