ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 12:49 am IST

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகி கே. பாலதண்டாயுதம் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. லிங்கம் கட்சிக் கொடி ஏற்றினாா். இதைத் தொடா்ந்து நடை பெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் குணசேகரன், கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் என். சாத்தையா, துணைச் செயலா்கள் பா.மருது, கே. கோபால், பொருளாளா் மனவழகன், ஒன்றியச் செயலா் சின்னக்கருப்பு, நகா் துணைச் செயலா் பாண்டி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றுத் தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

சிவகங்கையில் நடைபெற்று முடிந்த அரசு ஒப்பந்ததாரா் பணிகளின் தரத்தை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், சிவகங்கை பழைய மருத்துவமனை, தெற்கு ரத வீதியில் உள்ள அரசு மதுக் கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.