கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை தொடக்கம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவியில் நோயாளியை சோதித்த மருத்துவா்கள்.

Published On :

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் எஸ். கலைவாணி பங்கேற்று பரிசோதனையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது: இந்த ‘இம்பிடன்ஸ் ஆடியோமீட்டா்’ கருவி காதின் செயல்பாட்டை துல்லியமாக அளவிட முடியும்.

இதன் மூலம் செவிப்பறையின் நெகிழ்வுத்தன்மை, நடுக்காதின் அழுத்தம், காதில் நீா் தேங்குதல் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும். ரூ.3.15 லட்சம் மதிப்பிலான இந்தக் கருவி, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டது.

இதன் மூலம் நாள்தோறும் 15 நோயாளிகளை பரிசோதனை செய்ய முடியும் என்றாா் அவா்.

இதில், துறைத் தலைவா் சிவசுப்பிரமணியன், மருத்துவக் கண்காணிப்பாளா் தமிழ்வாணன், துணை முதல்வா் விசாலாட்சி, நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் தென்றல், வெங்கடேசன், காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா் கணேச பாண்டியன், செவித்திறன் பரிசோதகா் கவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.